Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நெருங்கி வா...8

  • Thread Author

அத்தியாயம்------8

இவை அனைத்தையும் தடுக்க முடியாத நிலையில் சகுந்தலா அம்மா வெறும் பார்வையாளராக மட்டும் நின்று விட்டார். அவருக்கு தெரியும் தன் மகன் இனிமேல் தன் பேச்சை கேட்க மாட்டான் என்று. சகுந்தலா அம்மாவுக்கும் பத்மினியின் விருப்பம் அவளின் முகத்தை பார்த்தே தெரிந்து விட்டது. இனிமேல் தான் என்ன தான் சொன்னாலும் பயன் இராது என்று.

மேலும் அவர் என்னதான் சொல்வார் ,என் மனதுக்கு சரி என்று பட வில்லை என்றா? திருமணத்தை தடுக்க எதாவது ஆதாரம் இருக்க வேண்டமா…?மேலும் நமக்கே இன்னும் சரியாக விளங்க வில்லையே. இது நமக்கும் கூட பிரம்மையாக இருக்கலாம்.இத் திருமணத்தால் தன் பேத்தி மகிழ்ச்சியுடன் இருக்கலாம் இல்லையா…?.என்று தன் மனதை தானே தேத்திக் கொண்டாள்.பின் நடப்பதை பார்ப்போம் என்று அனைவரையும் சாப்பிட அழைத்து சென்றார்.

பத்மினிக்கு பிரதாப்பின் முகத்தை பார்ப்பதற்கே தயக்கமாக இருந்தது. ஏன் என்றால்?அவன் முகத்தை பார்க்கையில் அவன் தன்னை பார்க்கும் போதும்… அவன் கண் தன் பார்வையில் கலக்கும் போதும்…. தன் உடலில் சொல்லவே முடியாத ஒரு உணர்வு. தன்னால் இயல்பாக கூட காட்டிக் கொள்ள முடிய வில்லை.நெஞ்சுக் கூட காலியான பிரம்மை.தன் முக சிவப்பையும் கட்டுப்படுத்த முடிய வில்லை.அதனால் அவன் முகம் பார்ப்பதையே தவிர்த்தாள்.

ஆனால் அசோக்கை பார்த்தவுடன் ஷாலினியுடன் தோன்றும் ஒரு தோழமை உணர்வுவே ஏற்பட்டது. அதனால் எந்தவித விகல்பமும் இல்லாமல் அவனிடம் பத்மினியால் பேச முடிந்தது. அந்த அடிப்படையில் அசோக்கை பார்த்தவாறு “வாங்க சாப்பிடலாம்”என்று ஒரு புன் சிரிப்புடன் அழைப்பு விடுத்தாள்.

அசோக்கும் பதிலுக்கு சிரித்தவாறே அவளுடன் இணைந்து நடந்து சென்றான்.பாவம் அவன் என்னவோ…. தன் நண்பனிம் மனைவி மற்றும் எதிர்கால முதலாளி ஆயிற்றே என்ற அடிப்படையில் தான் தன் சிரிப்பை கொஞ்சம் தாரளமாகவே படர விட்டான்.

ஆனால் அந்த சிரிப்பே தனக்கு ஆப்பு வைக்கும் என்று அவன் எதிர் பார்க்க வில்லை.ஆம் பிரதாப் என்ன தான் தன்னுடைய திருமண விஷயமாக பேசிக் கொண்டிருந்தாலும்….பத்மினியுடன் வந்த ஷாலினியை பார்த்தவுடன் அசோசக் முகத்தில் தோன்றிய ஆர்வத்திலேயே அவன் மனதை தெரிந்துக் கொண்டான்.அசோக் பெண்களை அவ்வளவு ஆர்வமாக எல்லாம் பார்க்க மாட்டான்.அதனால் அசோக்கின் ஷாலினியுடனான பார்வையிலேயே அவன் விருப்பத்தை தெரிந்துக் கொண்டான்.

அதனால் ஏற்கனவே கடுப்பில் இருந்த பிரதாப்.தன்னிடம் பேசாத பத்மினி அசோக்கிடம் சிரித்து பேசியது அவனுக்கு எரிச்சலை வரவழைத்தது.அது மட்டும் இல்லாமல் பதிலுக்கு அசோக்கும் அவளிடம் சிரித்தவாரே உடன் சென்றது.அவனுக்கு சுத்தமாக பிடிக்க வில்லை. பிடிக்கவில்லை என்றால்…. அவன் சந்தேகம் படுகிறான் என்று இல்லை. ஏன் என்றால் அவனுக்கு அசோக்கை பற்றி நன்கு தெரியும்.

மேலும் பத்மினியுடன் பழக்கம் இல்லை என்றாலும் பத்மினியிடமும் அவனுக்கு சந்தேகம் இல்லை. என்ன ஒன்று அவள் தன்னிடம் பேசாமல் அசோக்கிடம் பேசியதில் தான் அவனுக்கு பிரச்சினையே….இதனால் தன் கவனத்தை ஷாலினியிடம் திருப்பினான்.

பிரதாப் ஷாலினியிடம் மெல்ல சிரித்த வாறே... “உங்கள் பெயர் என்ன”?என்ற பிரதாப்பின் ஒரு கேள்வியிலேயே பத்மினி சட்டென்று திரும்பி பிரதாப்பையையும், ஷாலினியையும், ஒரு சேர பார்த்தாள்.

பத்மினியின் இந்த பார்வையால் பிரதாப் குஷியாக போய் விட்டான்.அவன் என்னவோ அசோக்கை கடுப்பு ஏத்துவதற்க்கே ஷாலினியுடன் பேசினான். ஆனால் பத்மினி கடுப்பாவாள் என்பது அவன் எதிர் பாராதது அதனால் மேலும் பத்மினியின் கவனம் தன் பக்கம் திருப்புவதற்கு ஷாலினியிடன்” நீங்கள் எந்த காலேஜில் படிக்கிறீர்கள்?என்ற பிரதாப்பின் கேள்விக்கு…

நம் புத்தி சாலியான ஷாலினி முதலில் பிரதாப் தன்னிடம் வலிய வந்து தன் பெயர் கேட்டது மகிழ்ச்சி அளித்தாலும் பின் பத்மினியை பார்த்தவாறே தான் படிக்கும் காலேஜை பிரதாப் கேட்டவுடன் அவள் உஷாராகி விட்டாள்.

அவள் விளையாட்டு குணம் உடையவள் தான். ஆனால் விள்ளங்கமானவள் கிடையாது.பிரதாப்பை பார்த்தவுடன் அந்த வயதுக்கே உரிய வகையில் தன் தோழிகளிடம் கலைய்த்தாலே தவிர மற்றப்படி வேறு அபிப்ராயம் அவளுக்கே கிடையாது.

அதனால் பிரதாப்பின் பேச்சில் தன்னை வைத்து பத்மினியுடன் விளையாட பார்க்கிறான் என்று சடுதியில் புரிந்துக் கொண்டாள்.இவளும் தன் விளையாட்டை விளையாடா ஆரம்பித்தாள்.பிரதாப்பிடம் தானும் சிரித்துக் கொண்டே “***** காலேஜில் படிக்கிறேன் என்று கூறினாள்.

பிரதாப்புக்கு இவள் என்ன கூறுகிறாள்? பத்மினியுடன் தானே இவளும் படிக்கிறாள், என்று நினைத்தவாறே “ நீ பத்மினியுடன் தானே படிக்கிறாய். பத்மினி ****காலேஜ் தானே” என்று தன்னை அறியாமல் கூறி விட்டான்.

மேலும் ஷாலினியை ஒருமையிலும் அழைத்திருந்தான்.ஆம் ஷாலினியை யாரோ போல் அவனால் என்ன முடிய வில்லை.வீடியோவில் பத்மினியுடன் ஷாலினியையும் பார்த்த போதே அவளின் விளையாட்டு தனமான பேச்சை ரசித்தான்.

மேலும் இப்போது தன் நண்பனின் மனதில் இடம் பிடித்தவள் என்ற கூடுதல் தகுதியும் பெற்றதாள் தன் உடன் பிறந்த தங்கையாகவே கருதினான்.அதனால் அவளை வெளி ஆளாக தள்ளி வைக்காமல் உரிமையில் ஒருமையில் தன்னை அறியாமலேயே அழைத்து விட்டான்.

ஷாலினி பிரதாப்பிடம் சிரித்தவாறே “இப்ப வந்தீங்களா… வழிக்கு எப்படி எப்படி நீங்க உங்க ஆள வெறுப்பு ஏத்துறதுக்கு நாங்க ஊறுகாயா”?என்ற பதிலில் பிரதாப் ரசித்து சிரித்தான்.

அசோக் மனதில் இங்க என்ன தான்டா நடக்குது. பிரதாப் சென்னை வந்து ஆளே மாறி போயிட்டான்.கேசவமூர்த்தியிடம் தழைந்து போவது என்ன? சரி அதாவது பரவாயில்லை,...அவனுக்கு அவன் காரியம் நடக்க வேண்டும். ஆனால் தன்னிடம் மட்டும் தான் பிரதாப் சிரித்து பேசுவான்.

ஆனால் இப்போது என்னன்னா?பைய்யன் ஷாலினியுடன் இப்படி சிரித்து பேசியது… அவனுக்கு ஆச்சரியமாக இருந்ததே தவிர தவறாக நினைக்க வில்லை. அசோக் இவ்வாறு நினைத்தான் என்றால்… பத்மினிக்கு மனதில் பொறாமை கொழுந்து விட்டு எரிந்தது.

ஷாலினியை முறைத்தவாறே வா நாம் போய் பாட்டிக்கு உதவி பண்ணலாம் என்று கையை பிடித்து அழைத்து சென்றாள். தவறு இழுத்து சென்றாள்.பிரதாப்பின் உதட்டில் புன் சிரிப்பை தவழ விட்டு போ ஷாலு சாப்பிட்டு நாம் பொறுமையாக பேசலாம். என்று சிரித்து கை அசைத்து விடை கொடுத்தான்.

அசோக் அவன் கையை தட்டி விட்ட வாரே… “ஏய்… கேசவமூர்த்தி சார் வராருடா, என்று கூறியவுடன் சட்டென்று சுற்றும் முற்றும் பார்த்தான்.பின் என்ன இப்போது தான் ஆயிரத்தெட்டு விசராணை கமிஷன் வைத்து ஒரு வழியாக பெண்ணை கொடுக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்காங்க அதை அசோக்கை வெறுப்பு ஏத்துறேன் பத்மினியை வெறுப்பு ஏத்துறேன்னுட்டு நான் ஷாலினியுடன் பேச போய் அதனால் பொண்ண கொடுக்க வில்லை என்றால்….,அவன் கவலை அவனுக்கு.

அசோக் பிரதாப்பிடம் “இவ்வளவு பயம் இருக்கு இல்லே பின்ன என்ன தேவைக்குன்னு நீ ஷாலினியுடன் பேசிக் கொண்டு இருக்கே….பேசுவது கூட பரவாயில்லை. இதோ இங்க இருக்க டையினிங் ரூமுக்கு போறதுக்கு என்னமோ வெளி நாட்டுக்கு போற மாதிரி கையை அசைச்சு விடை கொடுக்குற…..

அடங்கி இரு இன்னும் கல்யாணம் கூட முடிய வில்லை என்று கூறி தன்னால் ஷாலினியுடன் பேச முடிய வில்லை இவன் மட்டும் பேசுகிறானே என்ற ஆதாங்கத்தை இவ்வாறு பேசி தீர்த்துக் கொண்டான்.

பிரதாப்பும் அசோக்கிடம் “நீ என்ன தேவைக்கு பத்மினியுடன் பேசினாயோ அதே தேவைக்காக தான் நானும் ஷாலினியுடன் பேசினேன்” என்று கூறி கண் அடித்தான்.

அசோக்குக்கு வெக்கமாக போய் விட்டது ஒரு அசட்டு சிரிப்பை உதித்த வாரே “எப்படி டா கண்டு பிடிச்சே”என்ற கேள்வியில் “ம்….நீ ஷாலினியை பார்த்தவுடன் ஜொள்ளு விட்டாய் அல்லவா அப்போது பாத்து காற்று வேறு வீசுச்சா உன் ஜொள் என் மேல் தெளிச்சது. நான் என்னடா ஜீன் மாதம் மழை பெய்கிறேதேன்னு உன் கிட்டே சொல்லலாம் என்று உன்னை கூப்பிட திரும்பினால் ….அப்போது தான் தெரிஞ்சது… அது மழை இல்லை நீ விட்ட ஜொள்ளுன்னு….”

அசோக் “சரி விடுடா இருந்து இருந்து நானே இப்போது தான் என் இருபத்தியொன்பது வயது பிரம்மச்சரிய விரதத்தை முடிக்க நேரம் வந்து இருக்குன்னு நினைக்கிறேன்.என்னை பார்ப்பதை விட்டு உன் மினியை பாறு…..”என்று கூறிக் கொண்டே பிரதாப்பை டைனிங் ரூமுக்கு அழைத்து சென்றான்.

அங்கு அவர்களுக்காக அனைவரும் காத்திருந்ததை பார்த்த அசோக் அவசரமாக பிரதாப்பின் கை பிடித்து இழுத்து சென்றான்.பிரதாப் அசோக்கின் கையை தட்டியவாறே “ஏண்டா இவ்வளவு அவசரமாக கூட்டிட்டு போற இப்போ வரும் போது தானே ராமைய்யா கொடுத்த டிபனை சாப்பிட்டு வந்த அதுக்குள் என்ன அவசரம்…”என்று கூறிக் கொண்டே பொருமையாக வந்து அமர்ந்தான்.

“ஏண்டா நான் சாப்பிடுவதுக்கா உன்னை அவசரமாக அழைச்சிட்டு வந்தேன் நமக்காக எல்லாரும் காத்திட்டு இருக்காங்க”தான் அவசரம் பட்டதற்க்கான காரணத்தை கூறினான்.

பிரதாப் மிக கெத்தாக” கொஞ்சம் நேரம் காத்திட்டு இருந்தா தான் என்ன.?

“உன் மாப்பிள்ளை முருக்கெல்லாம் அவர் பெண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்தவுடன் காமி…. இப்போ கல்யாணம் இன்னும் நடக்க வில்லை.அவரை பெண்ணை கொடுக்கலாமான்னு….. யோசிக்க வைச்சிடாதே”என்ற அசோக்கின் பேச்சில் இருக்கும் உண்மையில் அவன் அடங்கி அமர்ந்தான்.

அசோக் மனதுக்குள்ளாக இன்னும் கல்யாணம் கூட நடக்க வில்லை. ஆனால் பயப்புள்ள அதுக்குள் என்னம்மா அடங்கி போறான். கல்யாணம் செய்வதற்கான அனைத்து தகுதியும் நம்ம பிரண்டுக்கு வந்து விட்டதாக கருதிக் கொண்டான்.

அங்கு டைனிங் டேபிளில் பத்மினிக்கு எதிர் பக்கமாக அமர்ந்து தன் இரு பக்கத்தில் அமர்ந்து இருக்கும் சந்தானத்திடமும், கேசவமூர்த்தியிடமும், மட்டுமே பேசிக் கொண்டு இருந்தான்.மறந்தும் தன் பார்வையை பத்மினி பக்கம் திருப்பவில்லை.

சற்று முன் அசோக் கூறிய பேச்சில் இருந்த உண்மையே அதற்கு காரணம்.தன் சிறு தவறால் கூட பத்மினியை இழக்க விரும்ப வில்லை.கல்யாணம் வரை தான் அடங்கி இருக்க வேண்டும். பிறகு நான் யார் என்று அவர்களுக்கு காட்ட வேண்டும்,என்று மனதுக்குள்ளாகவே கூறிக் கொண்டான்.

ஆனால், இது ஏதும் அறியாத பத்மினி மனதுக்குள் குழம்பிக் கொண்டிருந்தாள். இவர் நம்மை பிடித்து தான் பெண் கேட்டாறா….? அப்படி பிடித்து கேட்டிருந்தாள், தன்னிடம் ஏன் ஒரு வார்த்தை கூட பேச வில்லை…? தன்னிடம் பேசுவது என்ன? பார்க்க கூட வில்லையே என்று குழம்பிக் கொண்டே தன்னையும் அறியாமல் பிரதாப்பையே பார்த்திருந்தாள்.

பிரதாப் சந்தானத்திடமும், கேசவமூர்த்தியிடமும், பேசியவார் இருந்தாலும்…. பத்மினி தன்னை பார்ப்பதை அறிந்துக் கொண்டான். அதுவும் அவள் தன்னை பார்க்கும் போது அவள் முகத்தில் குழப்பமே மிகுந்து இருந்தது.இவள் எதற்க்கு தன்னை இப்படி குழம்பி போய் பார்க்கிறாள்.

இவளை பார்த்ததில் இருந்து என்னை காய விடுறாளே….இது என்ன பார்வை ஆசையாக பார்த்தாள் கூட பரவாயில்லை..இவள் இப்படி பார்த்தாள் நம்மை சந்தேகம் படுகிறாளோ...என்ற எண்ணம் மனதில் உதித்தவுடன் அவசரம் அவசரமாக தன் உணவை உண்டு விட்டு அசோக்கையும் அவசரமாக கிளப்பினான்.

பாவம் அவன் அப்போது தான் ஷாலினியை நிதானமாக நோட்டம் விடவே ஆரம்பித்திருந்தான்.ஆனால் அதற்குள்ளாகவே பிரதாப் அனைவரிடமும் சொல்லிக் கொண்டதோடு மட்டும் அல்லாமல் அவன் கையை இழுத்தவாறு கார் அருகில் வந்த உடன் தான் அசோக்கின் கையையே விட்டான்.

பின் அவசரமாக காரை எடுத்துக் கொண்டு இரண்டு சந்து கடந்த பின் காரை ஒரமாக நிறுத்தி தன்னை நிதானம் படுத்தி கொண்டான். இவன் செயல்களை பார்த்து கொண்டிருந்த அசோக் “என்ன பிரதாப் ஏன் இந்த டென்ஷன்… எல்லாம் நாம் நினைத்த மாதிரி சரியாக தானே நடந்தது. பின் எதற்க்கு அவசரமாக வந்தாய் “என்ற அசோக்கின் கேள்விக்கு…

“எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல அசோக். பத்மினி என்னையே பாத்துட்டு இருந்தா……”என்ற பிரதாப்பின் பேச்சில் அசோக்குக்கு மண்டை காய்ந்த்து தான் மிச்சம்.

“பத்மினி முதலில் பார்க்க வில்லையின்னு சொன்ன ….இப்போது என்னான்னா பாக்குறா அப்படின்னு பயந்துட்டு ஓடி வர உனக்கு என்ன தான் பிரச்சனை…

அது தான் எனக்கு தெரியலே அசோக் பத்மினி என்ன சந்தேகத்தோடு பார்த்த மாதிரி இருந்தது.ஒரு சமயம் அவள் சாதாரணமாக கூட பார்த்து இருக்கலாம்.ஆனால் எனக்கு தான் மிகவும் பயமாக இருக்கு” என்ற பிரதாப்பின் பேச்சை அசோக்கால் தான் நம்ப முடிய வில்லை.

பிரதாப் எதற்கும் அஞ்சாதவன். அப்படி பட்டவன் இப்போது இந்த பயம் இந்த நடுக்கம் அவனுக்கு புதியது.அதை அசோக் பிரதாப்பிடம் கூறிய போது….

“இந்த பொய் கூட எனக்கு புதியது தானே அது தான் இந்த பயம் அது மட்டுமா…. இனிமேல் நான் கூற போகும் பொய் தான் எனக்கே என்னை மன்னிக்க முடியாமல் இருக்க போகிறது.”என்ற பிரதாப்பின் பேச்சில் அசோக்குக்கு குழப்பம் ஏற்பட்டது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இவன் பெரிய திட்டம் நமக்கே தெரியாமல் திட்டம் இட்டு இருக்கிறான். ஆனால் அந்த திட்டத்தில் அவனுக்கே உடன் பாடில்லை என்று…

“என்ன பிரதாப் திட்டம் செய்திருக்கிறாய் அதுவும் எனக்கே தெரியாமல்”

“அசோக் நான் திட்டம் எல்லாம் தீட்ட வில்லை அதுவும் உனக்கு தெரியாமல்….இனிமேல் தான் நான் ஒரு பெரிய பொய் கேசவமூர்த்தியிடம் சொல்ல வேண்டும்.”

அசோக்கின் புரியாத பார்வையில் “கேசவமூர்த்தி என்ன சொன்னார்….ஞாபகம் இல்லையா...என் பெற்றவர்களை அழைத்திட்டு வர சொல்லியிருக்காறு…..

“ஆமாம் பிரதாப் நானே உன்னை கேட்கலாம் என்று நினைச்சிட்டு இருந்தேன்.அம்மா,அப்பா எப்போ வேல்ட்டு டூர் போனாங்க… என் கிட்டே அதை பத்தி சொல்லவே இல்லை.

“அதை பற்றி தான் நான் உன் கிட்டே சொல்லனும் அசோக். என் அம்மா, அப்பாவை கேசவமூர்த்தியும், சகுந்தலா அம்மா பாத்துட்டா….கண்டிப்பா பத்மினியை எனக்கு கல்யாணம் செய்து கொடுக்க மாட்டாங்க…”

“ஆமா… இதை நாம் யோசிக்கவே இல்லையே…பிரதாப். பார்க்கிறது என்ன உன் அப்பா, அம்மா பெயர் கேட்டாலே தெரிஞ்சிடுமே....

“ அசோக் நீ யோசிக்கலேன்னு சொல்லு…..நான் யோசிக்கலேன்னு சொல்லாதே….”

“அப்போ இதை பற்றி தான் ஏதோ பெரிய பிளான் யோசிச்சு வைச்சிருக்கே….என்ன பிளான்?

“அசோக் நான்… என் அப்பா, அம்மா பெயரையே மாத்தி சொல்ல போறேன்.அதுவும் இல்லாமல் கல்யாணம் அன்னைக்கு வேறு யாரையாவது என் பெற்றோர் என்று கொண்டு வந்து நிறுத்தனும்.”

பிரதாப் சொல்வதை கேட்டு ஒரு நிமிடம் அசோக்குக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை.அதுவும் இல்லாமல் அவனும் யோசித்ததில் இதை தவிர வேறு வழியும் இல்லை.

முதலில் என்றால் வெறும் பழி வாங்குவதற்கு இந்த திருமணம் என்று நினைத்திருந்தான். ஆனால் இப்போது அவன் சென்னை வந்த உடன் அவனிடம் தென்பட்ட மாற்றம். அவன் முகத்தில் தென் பட்ட மகிழ்ச்சி இத்தனை வருடத்தில் அவன் பார்த்ததே இல்லை.

ஏன் பிஸ்னஸில் எவ்வளவு லாபம் வந்த போதும்….இந்த மகிழ்ச்சியை அவன் முகத்தில் பார்த்தது இல்லை.ஒரு சின்ன பார்டியோடு முடித்து விடுவான்.சென்னை வந்த பிறகு தான் மனது விட்டு பேசுகிறான்….சிரிக்கிறான்.அதற்கு காரணம் கண்டிப்பாக பத்மினி தான். இதில் சந்தேகம் ஏதும் இல்லை.

எந்த காரணம் தொட்டும் இந்த திருமணம் நிக்க கூடாது.அதனால் பிரதாப் சொன்ன யோசனை பிடிக்கா விட்டாலும் அதற்கு உடன் படுவது என்ற முடிவுக்கு வந்த உடன் தன் கையை பிரதாப் கையோடு பிணைத்து “நீ என்ன செய்தாலும் உனக்கு என் சப்போர்ட் எப்போதும் உண்டு. பத்மினியை திருமணம் செய்ய இது தான் வழி என்றால் அதுவே செய்...ஆனால் எது செய்வது ஆனாலும் சீக்கிரமாக செய்ய வேண்டும். அவர்களுக்கு சிறு சந்தேகம் கூட ஏற்படக்கூடாது.ஏற்கனவே சகுந்தலா அம்மாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாது போல் தான் தெரிகிறது.”என்று பிரதாப் நினைத்ததையே அசோக்கும் கூறினான்.

அசோக்கின் கை பற்றிய வாறு “இப்போது தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கு.எனக்கு ஏதோ தவறு செய்வது போலவே இருந்தது.நம் பெற்றவர்களின் பெயரையே மாற்றி சொல்லவது என்றால்…..அதுவும் என் அப்பா,அம்மா, என் கல்யாணம் பற்றி பல கனவுகள் உள்ளது.ஆனால் இப்போது என் திருமணம் அவர்கள் இல்லாமலேயே….”என்று கூறி வேதனையுடன் அசோக்கின் தோள் சாய்ந்தான்.

இவர்கள் நினைப்பது எல்லாம் நடக்குமா…..
 
Top