Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

மேவியமே மந்ராவின் மந்திரம்....1...1

  • Thread Author
அத்தியாயம்…1…1

மேவியமே மந்ராவின் மந்திரம்…

திருவல்லிக்கேணி இடத்தில் முக்கிய பிராதான சாலையில் அமைந்திருக்கும் அந்த நடுத்தர வீட்டில், காலை ஆறு மணி முதலே வீடு பர பரப்பாக காணப்பட்டது.. பர பரப்பு என்றால் ஏதாவது விசேஷமா என்று நீங்கள் நினைத்தால் அது தான் இல்லை…

அனைவரின் வீட்டிலும் தினம் நடக்கும் வேலைக்கு செல்லும் முன்.. சமைப்பது தான்.. இடை இடையே அந்த வீட்டு ஆண்கள் முதல் பெண் வரை கேட்கும் பொருள்களை எடுத்து கொடுப்பதும்…

“தோய்க்க போட்ட சாக்ஸ்… தோச்சிட்டிங்கலா…?…” என்ற குரல்… அந்த வீட்டின் கடைசி அறையில் இருந்து அந்த வீட்டின் மகனான வினோத் குரல் கொடுத்தான்..

அதற்க்கு அந்த வீட்டின் நடு மத்தியில் இருக்கும் சமையல் அறையில் இருந்து அவனின் அன்னை கவிதா …

“துவைத்து காய போட்டு உன் ஷெல்பில் தான் வைத்தேன் டா…. நல்லா உன் கண்ணை திறந்து வெச்சி பாரு.. ….” என்று பதில் குரல் கொடுக்க..

..அதற்க்கு பதிலாக வினோத்… .. “ ம்மா அங்கு தான் ம்மா பார்த்தேன் இல்லே… நீங்க வந்து கொஞ்சம் எடுத்து கொடுத்துட்டு போங்க ….” என்று சொல்லியவனிடம் ..

கவிதா சலித்து போனவராக… “ நேத்து போட்டுட்டு போனதையே போட்டுட்டு போ டா.. என்னால.. இங்கு இருந்து என்னால வர முடியாது..” என்று சொன்னவர்..

தக்காளி சட்னி செய்ய வெங்காயம் தக்காளியை வதக்கியவர்… அந்த கடாயை ஒரு துணி கொண்டு பிடித்து கூடத்திற்க்கு எடுத்து வந்தவர்…

அங்கு இருந்த சாப்பிடும் மேஜையின் மீது அதை வைத்து விட்டு பேனையும் ஓட விட்டார்… அந்த செயற்க்கை காற்றின் கீழேயே கொஞ்சம் நேரம் நிற்க தான் உடல் சொன்னது..

ஆனால் வேலை அதுவும் ஸ்டவ்வின் மீது வைத்து விட்டு வந்த அந்த தவ்வா அவரின் நியாபகத்தில் வந்த நொடி, மீண்டும் சமையல் அறைக்குள் புகுந்து கொண்டார்.

அங்கு கவிதாவின் நாத்தனார்… ஜீவிதா இவர் வைத்து விட்டு சென்ற தவ்வாவில் தோசை சுட்டு கொண்டு இருந்ததை பார்த்த கவிதா….

“என்ன அண்ணி… நான் வர மாட்டேனா….?” என்று கேட்டு கொண்டே ஜீவிதாவின் கையில் இருந்த தோசை கரண்டியை வாங்க பார்த்தவரிடம் ஜீவிதா தராது…

“நீங்க மத்ததை பாருங்க அண்ணி.. நான் எல்லோருக்கும் தோசை சுட்டு வைக்கிறேன்…” என்று சொல்லியவர் அவர் பாட்டுக்கு சுட்டு கொண்டு இருந்தார்…

சிறிது நேரம் தன் நாத்தனாரும், அண்ணியுமான ஜீவிதாவையே பார்த்து கொண்டு இருந்த கவிதா,…

பின்.. “ நீ சொல்ற பேச்சே கேட்க மாட்டே “ என்று சொல்லி விட்டு கவிதா அடுத்து ஸ்டவ்வில் வெண்டைகாயை வதக்க ஆரம்பித்து பின் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு தான் இருவரும் சமையல் அறையை விட்டு வெளியில் வந்தது…

கடைசி அறையில் இருந்து குரல் கொடுத்து கொடுத்து ஓய்ந்து போன நம் வினோத்.. அவன் அன்னை சொன்னது போல தான் நேற்று போட்டுக் கொண்டு சென்ற சாக்ஸ்ஸையே தான் போட வேண்டும் என்று நினைத்து கொண்டு சாப்பிடும் இருக்கையில் வந்து அமர்ந்தவன், தவறாது தன் அன்னையை பார்த்து முறைப்பதையும் மறக்கவில்லை..

ஆனால் கவிதா அதை எல்லாம் சட்டை செய்யாது வேலைக்கு செல்லும் அந்த வீட்டின் மூன்று ஆண்களான தன் கணவனாம மகேந்திரனுக்கும்.. தன் அண்ணன் சுதாகரனுக்கும்.. தன் தவப்புதல்வன் வினோத்திற்க்கும் சாப்பாட்டை கட்டி வைத்தவர்.

பின் கடைசியாக ஒரு சின்ன தட்டில் ஆர வைத்த சாதத்தில் நெய் கொஞ்சம் அதிகம் ஊற்றி அவர் கை படாது கரண்டியில் கலந்து பக்குவமாக ஒரு டிபன் பாக்ஸ்ஸில் கட்டும் பாங்கிலேயே தெரிந்தது…

அந்த உணவை சாப்பிடும் நபர்… கவிதாவுக்கு எத்தனை பிடிக்கும் என்பதை… இதை எல்லாம் காதில் புகை வர பார்த்து கொண்டு இருந்தவன்..

அவன் அன்னையை கோபமாக பார்த்து.. “ ம்மா நீங்க செய்யிறது ரொம்ப அநியாயம் ம்மா… அவளுக்கு ஏற்கனவே இருக்கும் கொழுப்பு போதும்.. நீங்க எதுக்கு இன்னுமே நெய் ஊத்தி அவளுக்கு கொடுக்கிறிங்க….?

இன்னும் அவள் குண்டோதரியா ஆக போறா. பாருங்க.. அப்புறம் கல்யாணம் கட்ட எவனும் வரல என்று அவளை என் தலையில் கட்ட கூடாது பார்த்துக்குங்க… ?” என்று வினோத் இதை கிண்டலாக தான் சொன்னான்.

அந்த வீட்டின் இளவரசி தன் அத்தை பெண்ணான மந்ராவுக்காக அவன் என்ன என்றாலும் செய்வான்… ஆனால் இது போல கிண்டல் பேசி. அந்த வீட்டில் இருக்கும் மற்றவர்களிடம் திட்டு வாங்காது போனால் அவனுக்கு அன்றைய நாள் முழுமை அடையாது..

அவன் நினைத்தது போல் தான் கவிதா மட்டும் அல்லாது அப்போது தான் உணவு உண்ண வந்த அந்த வீட்டின் மூத்த பெண்மணியுமான கவிதாவிற்க்கு மாமியாரும் ஜீவிதாவுக்கு அம்மாவுமான திரிபுர சுந்தரி…

“இது என்ன பேச்சு வினோத்… நம்ம வீட்டு பெண்ணை நீயே இப்படி பேசுவீயா.?” என்று அதட்டினார்… என்றால் அப்போது தான் நடை பயிற்ச்சி முடித்து விட்டு வந்த ஆண்களில் மாமனும் மச்சானில் வினோத்தின் அப்பாவான மகேந்திரன்…

“மந்ரா உனக்கு பொருத்தம் இல்லேடா….” என்று சொன்ன தந்தையின் பேச்சுக்கு வினோத்தும்..

“நானும் அது தான் ப்பா சொன்னேன்…” என்று அவன் சொன்ன அடுத்த நொடி..

“அது தான் டா.. வைரத்தை தங்கத்தில் தான் பதியனும்… தகரத்துல கிடையாது….” என்று சொன்னவரின் பேச்சில்..

“என்ன பேச்சு இது மச்சான்…” என்று சுதாகர் ஒரு குரல் கொடுக்க… மறு குரலாக… இது வரை தன் பேரனை திட்டிக் கொண்டு இருந்த திரிபுர சுந்தரி பாட்டியுமே தன் மகனை பார்த்து .

“என்ன பேச்சு இது மகேந்திரா… உன் கிட்ட எத்தனை முறை சொல்லி இருக்கேன்.. வார்த்தையை பார்த்து விடனும் என்று…” இப்படி சொன்னவரின் குரலில் அத்தனை கம்பீரம்..

எப்போதும் போல் தன் பாட்டியின் குரலில் இருந்த கம்பீரத்தை மட்டும் அல்லாது தன் பாட்டியிடம் தெரியும்.. அந்த கம்பீரமான அந்த தோற்றத்தையுமே சேர்த்தே ரசித்து கொண்டு அங்கு வந்த நம் கதையின் நாயகி.. மந்ரா…

வினோத்தின் அருகில் அமர்ந்தவள் “ என்ன வினோ அத்தான்… இன்னைக்கு கொஞ்சம் டோஸ் அதிகம் போல..” என்று கிண்டல் அடித்துக் கொண்டே அனைவருக்கும் உணவை பரி மாறி சாப்பிட அமர்ந்தவள்..

ஒரு வாய் தோசையை வாயில் அடைத்து கொண்டே…

அனைவரிடமும் பொதுவாக. “நான் நேத்து யார் வீட்டிற்க்கு போய் பிசியோ செய்துட்டு வந்தேன்… தெரியுமா….?” என்று கேட்டு கொண்டே இன்னொரு வாய் தோசையை எடுத்து வாயில் வைத்தாள்..

உடனே அவளின் பாட்டி… “ என்ன மந்ரா. ஆஸ்பிட்டலில் அட்மிஷன் ஆகி சர்ஜரி செய்தவங்களுக்கு மட்டும் தானே நீ பிஸியோ செய்வ. இது என்ன வீட்டிற்க்கு போய் எல்லாம் ….” என்று அவளிடம் கேட்டவர்

.பின்.பேத்தி பதில் அளிக்கும் முன் வினோத்திடம்… “ இதுக்கு தான் அவள் இந்த படிப்பு எடுத்து படிக்கும் போதே சொன்னேன்… இது எல்லாம் வேண்டாம்…என்று … நீ தான்.. இது மத்தவங்க வலியை போக்குவது.. புனிதம் என்று எல்லாம் சொன்ன….” என்று திட்டிக் கொண்டு இருக்கும் போதே..

வினோத்தும் மந்ராவிடம்.. “ என்ன டி.. நீ அந்த ஆஸ்பிட்டலில் சேரும் போது… இங்கு அட்மிஷன் ஆனவங்களுக்கு மட்டும் தான் நீ பிஸியோ செய்வ என்று சொன்னாங்க. இப்போ நீ யார் வீட்டுக்கோ போன என்று சொல்ற… நேத்து நீ அங்கும் போகும் முன்னே எனக்கு போன் போட்டு சொல்றதுக்கு என்ன…?” என்று அதட்டினான்...

இத்தனை நேரம் வைரம் என்று சொஞ்சிய அவளின் மாமன் கூட. “ என்ன மந்ரா இது.. எதாவது புதுசா செய்தா வீட்டில் சொல்ல மாட்டியா…?” என்று சொன்னார்.

மந்ராவின் உள் மனமோ ஒன்று கூடிட்டாங்கடா ஒன்று கூடிட்டாங்க என்று தான் சொன்னது..

அது என்னவோ அனைத்திலும் தன்னை கொண்டாடும் தன் வீடு.. ஏன் தான் தனித்து எங்காவது செல்வது என்றால் மட்டும்.. தனக்கு எதிராக நின்று விடுகிறார்கள்.. ஏன் தனக்கு மட்டும் இத்தனை பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்பது தான் இன்று வரை அவளுக்கு புரியவில்லை…

தான் அழகான பெண் தான்.. தினம் தினம் கண்ணாடியில் பார்க்கும் அவள் உருவம் சொல்லும் அவளின் அழகை… வினோத் கிண்டல் செய்வது போல குண்டு எல்லாம் அவள் கிடையாது…

ஆனால் இப்போது இருக்கும் பெண்கள் போல அவள் ஜீரோ சைஸ் என்று இல்லாது கொஞ்சம் பூசிய உடல் வாகு தான் அவளுக்கு. ஆனால் அவளுக்கு அது தான் அழகு. இரு கன்னத்திலுமே அவளுக்கு குழி விழும்…. அந்த குழி அவளின் உப்பிய கன்னத்திற்க்கு இன்னுமே அழகு கூட்ட..

சிறு வயதில் அவளை பார்ப்பவர்கள்… அனைவரும் அவள் கன்னத்தை கிள்ளி விட்டு செல்லாது செல்லமாட்டார்கள்..

பெரிய வயதான போது.. இதோ இன்று வெளியில் அவளை புதியதாக பார்ப்பவர்கள் என்ன… பார்த்தவர்களே இவளை பார்த்து பேசும் போது அவ்வப்போது பேசுபவர்களின் பார்வை அவள் கன்னத்தை தொட்டு விட்டு மீளும்…

நிறம்.. கூந்தல்… முக லட்சணம் என்று ஒரு தனித்தன்மை அவளிடம் இருக்கும்… இவளின் இந்த அழகு. அவளின் அம்மா ஜீவிதாவிடம் இருந்து வந்தது.. ஜீவிதாவுக்கோ… அவரின் அன்னை சிறிது நேரம் முன்பு மந்ரா பார்த்து ரசித்த அவளின் பாட்டியிடம் இருந்து வந்தது.

என்ன ஒன்று அவளின் பாட்டியிடம் அழகோடு ஒரு கம்பீரம் தெரியும்.. மந்ராவிடம் கம்பீரத்தோடு மென்மை தெரியும்.. ஆனால் ஜீவிதாவிடம் இது இரண்டும் இல்லாது ஒரு அமைதி தெரியும்.. மூன்று பேருமே ஒன்று போல் தான் இருப்பார்கள் வயது வித்தியாசத்திற்க்கு ஏற்ற அழகுடன்…

தன் அழகா தன்னை தனித்து வெளியில் அனுப்பாததிற்க்கு காரணம் என்பதை அவளாள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை… தன்னை விட அழகான பெண்கள் எல்லாம் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.. அவர்கள் எல்லாம் என்னை போலவா இருக்கிறார்கள்.. எப்போதும் ஒரு பாடி காட்டோடு. என்று அவளுக்கு ஒரு வித சலிப்பு தான் வந்தது..

அவளின் அந்த சலிப்பை எல்லாம் சட்டை செய்யாது மீண்டும் அனைவரும் “ என்ன புதுசா வீட்டிற்க்கு போய் எல்லாம் பிஸியோ செய்யிறது . அப்படி எல்லாம் போவது என்றால் வேலையை விட்டு நின்னுடு….” இப்படி சொன்னார் அவளின் பாட்டி…

படிப்பு முடிந்து இந்த ஒரு வருடமாக தான் அவள் வேலைக்கு.. செல்வது… வேலைக்கு சென்று தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லாத குடும்பம் தான்.

ஆனால் அதற்க்கு என்று இத்தனை நல்ல சம்பளத்தை வேண்டாம் என்று உடனே தூக்கி எரிந்து விட்டு வரும் அளவுக்கு அத்தனை வசதி என்றும் சொல்லி விட முடியாது.... மத்திய வர்க்கத்தில் இருந்து வினோத்தும் தன் படிப்பு முடிந்து இந்த மூன்று வருடங்களாக ஐடியில் வேலை பார்ப்பதினாலும், இவளும் ஒரு வருடமாக வேலைக்கு செல்வதினாலும்.. இப்போது தான் மெல்ல மெல்ல மத்திய வர்க்கத்தில் இருந்து உயர் மத்திய வர்க்கத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது அவர்களின் குடும்பம்..

அவளின் அப்பா ஸ்டேஷனரியும்.. கூடவே ஜெராக்ஸ் கடையும் ஒன்றாக வைத்து நடத்துக்கிறார்.. கடை வாடகை கடை தான். அவளின் மாமா ட்ரைவிங்க ஸ்கூல் வைத்து நடத்திக் கொண்டு இருக்கிறார்…

இப்படி நல்ல சம்பளத்தை தூக்கி போட்டு வா என்று சொல்றாங்கலே… இந்த பாட்டி.. அதில் முகத்தை தூக்கி வைத்து கொண்டவள்..

“நேத்து நான் யார் வீட்டிற்க்கு போனேன்.. என்று சொன்னா இப்படி நீங்க சொல்ல மாட்டிங்க….” என்று சொன்னவள்..

பின் இத்தனை நேரம் முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருந்தவளின் அந்த பாவனை மாறி போய்…. அதில் ஒரு பெருமிதம் குடி கொள்ள.அன்று உண்மையில் காலர் வைத்த சுடியை அணிந்து இருந்தவள் அதை இழுத்து காட்டியவளாக.

“நேத்து நான் சி. எம் வீட்டிற்க்கு போயிட்டு வந்தேன்…” என்று அவள் சொன்னது தான் தாமதம்..

வினோத்… “ சும்மா விடாதே..” என்று அவளை எப்போதும் போல கிண்டல் அடித்தான் என்றால்,

திரிபுர சுந்தரியோ … பேரன் சொல்வது தான் உண்மையாக இருக்க வேண்டும் என்று தனக்கு சாதகமானதையே நினைத்து கொண்டவர்.. தன் பேத்தியிடம்..

“உனக்கு எதுல விளையாடுறது என்று இல்லையா டி… நீ என்ன இன்னுமே சின்ன பெண்ணா.. இருபத்திரெண்டு வயசு ஆகுது…” என்று கண்டித்தவரிடம் மந்ரா..

“பாட்டி நான் உண்மையை தான் சொல்றேன்.. நான் வேலை பார்க்கும் ஆஸ்பிட்டல் அவருடையது தான். பினாமி தான் நம்ம ஏரியா எம். எல்.ஏ…” என்று சொன்னவள் அதோடு விடாது..

தன் இரு கையையும் காட்டி… “ நம்ம சி.எம் மாமனாருக்கு நான் இந்த கைய்யாலே தான் பிஸியோ செய்தேன் தெரியுமா..?” என்று அவள் சொல்லி முடித்த நொடி…

எப்போதுமே பாசத்தை மட்டுமே காட்டிய அவளின் தாய் மாமனும்.. தன் அத்தையின் கணவனுமான மகேந்திரன்… அவளின் கன்னம் சிவக்கும் அளவுக்கு இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அடித்தார்..

வினோத. “ ப்பா என்ன ப்பா என்ன செய்யிறிங்க…” என்று சொல்லி தன் தந்தையை விலக்கி விட்டவன். தன் தந்தையை அன்று அவன் புதியதாக பார்த்தான்.

கண்கள் இரண்டும் சிவக்க… வினோத் இடையின் நின்று கொண்டு இருந்தவனையும் மீறி… மந்ரா மீது பாய பார்த்தவரை.. தன் தந்தையை இது வரை மென்மையாக தான் அவன் பார்த்திருக்கிறான்…

ஒரு ஆண் இத்தனை மென்மையாக இருக்க முடியுமா என்று நினைக்கும் அளவுக்கு தான் அவர் இருப்பார்.. அதிர்ந்து கூட அவர் பேசி அவன் இது வரை பார்த்தது கிடையாது… இன்று வினோத் தன் தந்தையை வினோதமாக பார்த்து கொண்டு இருக்க..

பேரனின் தன் மகன் மீது இருக்கும் அந்த ஆராய்ச்சி பார்வையை பார்த்த அவனின் பாட்டி என்ன நினைத்தாரோ…

“மகேந்திரா இனி இந்த பேச்சு பேச வேண்டாம் விடு.” என்று சொன்னவர் பின் தன் பேத்தியிடம். “ இனி நீ வேலைக்கு போக தேவையில்லை..” என்று சொன்னவர் தன்னையே ஒரு வித பயத்துடன் பார்த்து கொண்டு இருக்கும் தன் மருமகள் கவிதாவிடம்.

“அவளுக்கு கட்டின சாப்பாட்டை எடுத்து உள்ளே வை…” என்று சொன்னவர்.. பின் தன்னையே புரியாது பார்த்து கொண்டு இருக்கும் மகளை பார்த்து.

“இவள் வேறு எப்போ பார்த்தாலும் இப்படியே பார்த்துட்டு நிற்கிறது.. உனக்கு எப்போ தான் தைரியம் வருமோ….” என்று பேசிக் கொண்டு இருந்தவர்.. அடுத்து என்ன சொல்லி இருந்து இருப்பாரோ…

அதற்க்குள் சிறிது நேரம் முன் இந்த தொகுதி எம்.எல் ஏ என்று சொன்ன மந்ரா வேலை பார்க்கும் முதலாளி சடகோபன் தன் படையோடு மட்டும் அல்லாது அவரின் மனைவி மகன் சுரேஷ் என்று குடும்பத்தோடு கையில் தட்டுக்களுடன் வந்ததோடு மட்டும்.

திரிபுர சுந்தரியிடம். அந்த எம்.எல்.ஏ… “ இந்தாங்க சம்மந்தி. இந்த தட்டை பிடிங்க….” என்றும் கூறினார்…


 
Top